
அமெரிக்கா அதன் நேச நாடுகளும் மற்றும்நேசமில்லாத நாடுகளும் தன் ஆட்சி, அதிகாரஅடக்குமுறையாலும், ஆணவத்தாலும்திரைமறைவில் செய்து முடித்த, இன்றும் செய்துகொண்டிருக்கும் கணக்கிலடங்கா கொலைபாதகசெயல்களையும், கோடிக்கணக்கான ஊழல்களையும்,பல ரகசிய ஆவணங்களையும் தன் இணைய தளம்மூலம் 'விக்கிலீக்ஸ்' வெளியுலகிற்கு கசியவிட்டிருக்கிறது அடப்பாவி இவனா அவன்? இப்படி செய்தான்?' எனசாதாரன மக்களும் வியப்பால் தன் மூக்கில் கைவைத்து ஆச்சரியப்படும் பல அவலங்களையும்,செய்து முடித்த பல கோடூரங்களையும் அவிழ்த்துவிட்டிருக்கிறது இந்த விக்கிலீக்ஸ் இணையதளம்.
'பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்' என்பதுபழைய மொழியாக இருந்தாலும் அதை தன் கோடூரமுகத்தால் அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகள்அவ்வப்பொழுது புதுப்பித்துக்கொண்டிருக்கின்றன.
இன்னும் இந்த இணைய தளம் மூலம் என்னென்னபூதங்கள் கிளம்பப்போகின்றனவோ? என்று தவறுசெய்தவர்களுக்கு "குற்றமுள்ள மனசு குறுகுறுக்கும்"என்பது போல் புளியைக்கரைத்துக்கொண்டிருக்கிறது.
அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்து அந்நாட்டை தன்முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகும்அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் உயிருக்கு பயந்துகூட்டம், கூட்டமாக தன் கைகளில்வெள்ளைக்கொடிகளை(சமாதானத்தின் சின்னமாய்)ஏந்தி அமெரிக்க ராணுவத்தை நோக்கி சரண் அடையவந்தவர்களை கூட விட்டு வைக்கவில்லை.வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டு வீழ்த்தி இருப்பதையும் இந்தஇணைய தளம் தெளிவாக படம் பிடித்து உலகுக்குவெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் முதற்கொண்டு அனைத்து அதிகாரவர்க்கங்களும் இணைய தளம் மூலம் உலகரகசியங்களை வெளியிட்ட 'விக்கிலீக்ஸ்'இணையதளத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும்முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க திசைதிருப்பப்பட்டுள்ளார்களே தவிர தவறு செய்தவர்களைதண்டிக்க அல்ல.
இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' இதன் மூலம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. அது பற்றி விளக்கங்களைஇன்னும் ஒரு சில நாட்களில் அல்லதுமணித்துளிகளில் வெளிவர நாம் அறியலாம்.
இது போன்ற உலக மகா தவறுகளையும்,குற்றங்களையும் செய்தவர்கள் உலக சட்டத்தின்முன் ஒரு போதும் முறையே விசாரிக்கப்பட்டுதண்டிக்கப்படுவதில்லை. மாறாக ஊடகங்கள் மூலம்உலக நட்சத்திர அந்தஸ்த்தை பெற்று அதன் மூலம்மேலும் பல ஆதாயங்களை அடைந்து கொள்கின்றனர்.
இது போன்ற ஆயிரமாயிரம் அவலங்கள் ஆங்காங்கேஅரங்கேறியிருந்தாலும் இதெல்லாம் அவல்பொறிதிண்பது போல் ஆகிவிட்டது அதை அன்றாடம்கேள்விப்படும் சாதாரன பொதுமக்களுக்கு எதிர்கேள்வி கேட்க எவ்வித சக்தியும் அற்றவர்களாய்.
இரும்புக்கோட்டைக்குள் செய்து முடித்தபேரகசியங்களையும், சதித்திட்டங்களையும்,அவலங்களையும் பாதுகாக்க முடியாத இந்த மனிதவர்க்கம் (வல்லரசுகள்) படைத்தவன் முன் எப்படி தன்தவறுகளை மறைத்து விட முடியும்?
உலகம் இப்படியேச்சென்று கொண்டிருந்தால்கடைசியில் 'பூனைக்கு யார் தான் மணிகட்டுவர்'?நிச்சயம் ஒரு நாள் கட்டப்படும் அது யுக முடிவு(கியாமத் நாள்) நாளாகத்தான் இருக்கும்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
0 comments:
Post a Comment